ஐஏஎஸ் ஆக ஆசையா? யுபிஎஸ்சியிடம் இருந்து வெளியான அறிவிப்பு? விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: குடிமைப்பணிகள் என அழைக்கப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை யு.பி.எஸ்.சி எனப்படும் மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்புகிறது.
இந்தியாவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பணியிடங்களில் சேர வேண்டும் என்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக உள்ளது. குடிமைப்பணிகள் என அழைக்கப்படும் இந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியிடங்களை யு.பி.எஸ்.சி எனப்படும் மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்புகிறது.

இதற்கான அறிவிப்புகள் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு, முதல் நிலை, மெயின்ஸ் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவை அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்: ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல பொறியியல் படிப்பை முடித்தவர்களுக்கு ஐஇஎஸ் தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 21 வகையான சிவில் சர்வீஸ் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
வயது வரம்பு & கல்வி தகுதி: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி படித்திருந்தால் போதுமானது. வயது வரம்பை பொறுத்தவரை தேர்வர்கள் குறைந்தபட்சம் 21 வயதில் இருந்து, 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் உண்டு. வயது வரம்பு குறித்த முழு விவரங்கள் தேர்வு அறிவிப்பில் உள்ளது.
தேர்வு முறை: முதன்மை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு என மூன்று கட்ட தேர்வுகளாக நடைபெறும். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும். பாண்டிச்சேரியிலும் தேர்வு நடைபெறுகிறது.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வர்கள் தேர்வு அறிவிப்பினை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 14. 02. 2024; விண்ணப்பிக்க கடைசி நாள்: 05. 03. 2024. முதன்மை தேர்வு நடைபெறும் நாள்: 26. 05. 2024 ஆகும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க https://upsconline.nic.in/upsc/OTRP/ என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும். தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://upsc.gov.in/sites/default/files/Notif-CSP-24-engl-140224.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
-
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. சென்னையில் மார்ச் 28ல் இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க -
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications