அப்பவும் தூங்குறாப்பா...!
அந்த இருவரும் திருமணமானவர்கள், நண்பர்கள். ஒரு முறை இருவரும் பாரில் உட்கார்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவன் சொன்னான்... எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. நான் நீண்ட நேரம் குடித்து விட்டு வீட்டுக்குப் போகும்போது, தெரு முனையிலேயே எனது காரின் இரு ஹெட் லைட்டுகளையும் அணைத்து விடுவேன். வீட்டை நெருங்கும்போது என்ஜினையும் கூட அணைத்து விடுவேன். பிறகு மெதுவாக காரேஜுக்குள் காரை நிறுத்துவேன்.
பிறகு எனது இரு ஷூக்களையும் கழற்றி விட்டு பூனை போல நடந்து மாடிப்படிகளில் ஏறுவேன். பிறகு மெதுவாக எனது டிரஸ்ஸை கழற்றி விட்டு படுக்கையில் படுக்கப் போவேன். அப்படி மிக மிக கவனமாக இருந்தும் கூட எனது மனைவி விழித்தெழுந்து ஏன் லேட் என்று கேட்கிறாள் என்றான் டென்ஷனாக.
அதற்கு மற்றவன் சொன்னான்... நீ செய்வது தவறு. நான் என்ன செய்வேன் தெரியுமா..தெரு முனையிலேயே காரை படு வேகமாக ஹார்ன் எழுப்பியபடி விரட்டிக் கொண்டு வருவேன். கதவை உடைப்பது போல திறப்பேன். பிறகு மாடிப்படிகளில் டபடபவென பலத்த சப்தம் எழுப்பியபடி ஷூவோடு ஏறுவேன். பின்னர் படுக்கை அறைக்குள் நுழைந்து ஷூக்கள் இரண்டையும் தாறுமாறாக தூக்கிப் போடுவேன். பிறகு படுக்கையில் வேகமாக ஏறி நிற்பேன். பிறகு எனது உடைகளை கழற்றி தூக்கி வீசுவேன். பிறகு படுத்துக் கொண்டிருக்கும் எனது மனைவியின் புட்டத்தில் எனது இரு கைகளையும் வைத்து தேய்ப்பேன். பிறகு அவளது காதுகளில் எப்படி இருந்துச்சு என்பேன். ஆனால் பாரு, அப்பவும் கூட அவள் குறட்டை விட்டு தூங்குவாள்...!












Click it and Unblock the Notifications