நீங்க கோவாக்சினா இல்ல கோவிஷீல்டா... அட, நான் கபசுரக் குடிநீர்ங்க!
சென்னை: கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் அரிதான பக்க விளைவுகள் ஏற்படலாம் எனத் தெரிய வந்ததில் இருந்தே, அந்த தடுப்பூசி கொண்டவர்களின் மனநிலை இப்படித்தான் இருக்கிறது என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
கொரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பூசி வராதா என ஏங்கிக் கிடந்த காலம் போய், இப்போது ஏன் தான் தடுப்பூசி போட்டுக் கொண்டோமோ என மக்கள் புலம்பும் நிலைக்கு வந்து விட்டார்கள் என்பது அவர்களது சமூகவலைதளப் பக்க பதிவுகளைப் பார்க்கும்போதே தெரிகிறது. கொரோனா தடுப்பூசியால் சில பக்கவிளைவுகள் ஏற்படலாம் என ஏற்கனவே பல உறுதியில்லாத யூகங்கள் உலா வந்தன.
இந்நிலையில், தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, அரிதான பக்க விளைவுகள் ஏற்படலாம் என அதனைக் கண்டுபிடித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனமே அதிகாரப்பூர்வமாகக் கூற, கேட்கவா வேண்டும் மக்களின் மனநிலையை. அவர்கள் சும்மா இருந்தாலும், இந்த குறும்புக்கார நெட்டிசன்கள் விடுவதாக இல்லை.
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என விதவிதமான நகைச்சுவையான மீம்ஸ்களை சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...



















Click it and Unblock the Notifications