வெயில்காலம்னா ஜூஸ் கடைல தான கூட்டம் நிக்கணும்.. ஆனா நம்மூர்ல மட்டும் அப்பவும் டீ கடைலதான் நிக்குது!
சென்னை : கோடை மழையால் சென்னை உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்கள் குளிர்ந்து போயுள்ள நிலையில், சமூகவலைதளப் பக்கங்களையும் மழை பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்து ஜில்லென மாற்றி வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
மார்ச் மாதமே வெயில் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டதே என மக்கள் புலம்பி வந்த நிலையில், அவர்களது மனதைக் குளிர்விக்கும் வகையில் கோடை மழை பொழிந்து வருகிறது. ஆனால், இந்த சின்ன மழையையே சமாளிக்க முடியாமல், சென்னை, நெல்லை, கோவை உள்ளிட்ட மாநகரங்கள் நீரில் ஆங்காங்கே தத்தளித்து வருகின்றன. வழக்கமாக இப்படி மழை நீர் தேங்கினால் அல்லது மக்கள் மழையால் அவதிப்பட்டால் உடனே அதை வைத்துத்தான் மீம்ஸ்களைப் பகிர்வது நம் நெட்டிசன்களின் வழக்கம்.

ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமாக, தங்கள் ஊரில் பெய்யும் மழையை மட்டும் வைத்து மீம்ஸ்களைப் பகிராமல், வெயில் தகிக்கும் மாவட்டங்களுக்கும் சேர்த்து மீம்ஸ் மழை பொழிந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில். கூடவே, "வெயில்காலம்னா ஜூஸ் கடைல தான கூட்டம் நிக்கணும்.. ஆனா நம்மூர்ல மட்டும் அப்பவும் டீ கடைலதான் நிக்குது!" என சைடுகேப்பில் டீ பிரியர்களையும் கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications