உலக வங்கியே காரி துப்பினத்துக்கு பிறகுமா இந்த பொய் சொல்லணும் அக்கா?
இந்திய பொருளாதாரம் கடந்த 3 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்துள்ளதாக டிவிட்டிய தமிழிசையை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
சென்னை: இந்திய பொருளாதாரம் கடந்த 3 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்துள்ளதாக டிவிட்டிய தமிழிசையை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளில் மிகப்பெரும் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்களை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அவரது பதிவுக்கு நெட்டிசன்கள் சரமாரியாக கலாய்த்து பதில் தெரிவித்துள்ளனர். அவற்றில் சில..
|
மிகக்கொடுமை உங்கள் ஆட்சி
சுகர் நோயாளிக்கு அடிப்படை தேவையான மருந்துக்கு 12% ஜிஎஸ்டி மிகக்கொடுமை உங்கள் ஆட்சி.. என்கிறார் இந்த வலைஞர்
|
இறந்துட்டுதான இருக்காங்க
என்னத்த வளர்ச்சி?? ஏழைகள் இறந்துட்டுதான இருக்காங்க.. என்கிறது இந்த டிவிட்
|
அதை சொல்றீங்களா?
எந்த வளர்ச்சிய சொல்றீங்க? அம்பானி, அதானியோட சொத்து மதிப்பு உயர்ந்துச்சே அதை சொல்றீங்களா?? என்கிறார் இந்த வலைஞர்
|
இந்த பொய் சொல்லணும்
உலக வங்கியே காரி துப்பினத்துக்குப் பிறகுமா இந்த பொய் சொல்லணும் அக்கா... என கேட்கிறார் இந்த நெட்டிசன்
|
கழுவி கழுவி ஊத்துறாங்க
எந்த நாட்டு பட்டியல்?? இந்தியா மட்டும் அல்ல உலக நாடுகளில் உள்ள பல நிபுணர்கள் பாஜக பொருளாதார கொள்கைகளை கழுவி கழுவி ஊத்துறாங்க... என்கிறார் இந்த வலைஞர்
|
எதை சொல்றீங்க?
பொருளே இல்லாமல்தான் திண்டாடுறாங்க மக்கள் .... பொருளாதாரம்னு எதை சொல்றீங்க?
முதல்லே இந்த டவுட்டுக்கு பதில் சொல்லுங்க... என்கிறது இந்த டிவிட்
|
ஏன் தூக்கிட்டாங்க?
பின்பு ஏன் வேகமாய் வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை தூக்கிட்டாங்க? என கேட்கிறார் இந்த வலைஞர்...












Click it and Unblock the Notifications