வெளியூர்ல இருந்து சரியா சாப்பிடாம காய்ஞ்சு போய் வந்தா.. 3 நாளா பொங்கலா தந்து டார்ச்சர் பண்றீங்களேடா!
சென்னை : பொங்கல் முடிந்து மூன்று தினங்களுக்கு மேலாகியும், இன்னமும் பல வீடுகளில் பொங்கல் தீர்ந்து முடியவில்லை என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
மற்ற பண்டிகைகளைவிட பொங்கலுக்கு எப்போதுமே தனிச் சிறப்பு உண்டு. வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள்கூட பொங்கலுக்கு சொந்த ஊருக்குச் சென்று, சொந்தபந்தங்களோடு பொங்கலைக் கொண்டாட வேண்டும் என விரும்புவார்கள். அதனால்தான் பொங்கல் பண்டிகையின் போது, சென்னை மாதிரி ஊர்கள் வெறிச்சோடி விடும்.
இப்படி ஆசை ஆசையாய் சொந்த ஊர் செல்பவர்களுக்கு மூன்று நான்கு நாட்கள் பொங்கலை மட்டுமே கொடுத்தால், அதுவும் தைப்பொங்கலன்று செய்த பொங்கலின் மீதியை மட்டுமே மூன்று வேளையும் சாப்பிடக் கொடுத்தால், பொங்கலைவிட வேகமாக அவர்கள் நொந்துபோகத்தானேச் செய்வார்கள்.
அப்படி நொந்து நூடுல்ஸாகிப் போன நெட்டிசன்கள், "ஒரு வேளை பொங்கல்னா ஓகே.. 3 நாளா.. 3 வேளையும் பொங்கல்னா.. எப்புடி சாப்டுறது!" என்றும், "வெளியூர்ல இருந்து சரியா சாப்பிடாம காய்ஞ்சு போய் வந்தா.. 3 நாளா பொங்கலா தந்து டார்ச்சர் பண்றீங்களேடா!" என்றும் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான பொங்கல் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications