வியாழன், வெள்ளிக்கு லீவு அப்ளை பண்ணப் போறவங்களோட லிஸ்ட் சார் இது!
சென்னை: பொங்கல் விடுமுறை முடிந்து மீண்டும் நாளை முதல் வேலைக்குச் செல்ல வேண்டுமே என இன்றே மீம்ஸ் போட்டு புலம்ப ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.
பொங்கல் எப்போது வரும் என எதிர்பார்ப்பவர்களில் பலர், கொண்டாட்டங்களைவிட , தொடர் விடுமுறைக்காகக் காத்திருப்பவர்கள்தான். பொங்கல் பண்டிகைக்கு மட்டும் தான் போகி, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும்பொங்கல் என தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். அதிலும் இம்முறை சனிக்கிழமையும் கூடவே சேர்ந்துவிட, ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்து விட்டது. இதனால் வழக்கம் போல் பலர் சொந்த ஊருக்கு பொங்கல் கொண்டாட சென்று விட்டனர்.
தற்போது பொங்கல் கொண்டாட்டத்தின் கடைசி நாளுக்கு வந்து விட்டதால், மீண்டும் சொந்த ஊரில் இருந்து சென்னை உட்பட தாங்கள் வேலை பார்க்கும் ஊருக்குச் செல்ல தயாராகி வருகின்றனர். ஊருக்கு கிளம்பும் இந்த அவசரத்திலும், சைடு கேப்பில், 'அதற்குள் பொங்கல் விடுமுறை முடிந்து விட்டதே' என, 'வாம்மா மின்னலு' டெம்ப்ளேட்டைப் போட்டு ஃபீல் பண்ணி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
இப்படி ஒரு குரூப் என்றால், மற்றொரு குரூப்போ நாளையும், அதற்கு அடுத்த நாளும் என இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்து விட்டால், வரும் ஞாயிறு ஊருக்குக் கிளம்பினால் போதும், கூடுதலாக நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும் என வேறொரு கணக்கைப் போட்டு வருகின்றனர். இவர்களையும் கலாய்க்க நெட்டிசன்கள் மறக்கவில்லை.
இதோ அப்படியாக நம் கண்ணில்பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
























Click it and Unblock the Notifications