கவர்ன்மென்ட் ரன் ஆனா தானே,அரசு பஸ் ஓடும்... கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு காரணமான அரசை விமர்சித்து ஏராளமான மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.
சென்னை: 13வது ஊதிய ஒப்பந்ததை நிறைவேற்ற வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களான சிஐடியூ, தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பெரும்பாலான பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் கைவிடப்படவில்லை, இந்நிலையில் அரசின் பரிதாப நிலையை சுட்டிக் காட்டி நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

ஏன் பஸ் ஓடல?
கர்ன்மென்ட் பஸ்லாம் ஏன் ஓடல, கவர்ன்மென்ட் ரன் ஆனா தானே அரசு பஸ் ஓடும், இங்கே அரசாங்கமே இல்லாம ஆட்சிக்குள்ளேயே ஐபிஎஸ் தானே நடக்குது என்று கலாய்க்கிறது ஒரு மீம்

எங்ககிட்ட ஏன் சொல்றீங்க..
அரசுப் பேருந்துகளை யாராவது உடைத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்திக்கு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது காவல்துறையினரே வாகனங்களுங்கு தீ வைத்த சம்பவத்தை ஒப்பிட்டு எங்க கிட்ட ஏன் சொல்றீங்க போலீஸ்கிட்ட சொல்லுங்க என்று லந்து பண்ணுகிறது மற்றொரு மீம்

ரோட்டுல மக்கள்
வாக்குக்கு ரூ.200 பணம் வாங்கியவர்கள் தற்போது நடுரோட்டுல நிற்கிறார்கள் என்று கடப்பேத்துகிறது மற்றொரு மீம்

காசு செலவாகிடுச்சு
வைப்புத் தொகை கேட்டு போராடும் போக்குவரத்து ஊழியர்களுக்கு காசு செலவாகிடுச்சுணு அரசாங்கம் வடிவேலு ஸ்டைலில் சொல்வது போலவும், இந்த பிழைப்புக்கு ஆட்சியை கலைத்துவிட்டு போகலாம் என்பது போலவும் மற்றொரு மீம் சொல்கிறது.












Click it and Unblock the Notifications