முதல் டெஸ்டில் இலங்கை வெற்றி - தொடர்கிறது பாகிஸ்தானின் தோல்விப் பயணம்
ராவல்பிண்டி: பாகிஸ்தானுக்கு எதிரான தல் கிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியைப் பெற்றது. இலங்கை அணியின் ரணதுங்கா, கலுவிதரன இருவரும் சிறப்பாக ஆடி தங்கள் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர்.
ராவல்பிண்டியில் நிடந்த இந்த டெஸ்டில் தல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 182 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இலங்கை 390 ரன்கள் எடுத்தது. அணியில் மீண்டும் சேர்க்கப்பட்ட அரவிந்த டி சில்வா சிறப்பாக ஆடி சதமடித்தார். 208 ரன்கள் பின்தங்கிய நலையில் பாகிஸ்தான் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
தனது தல் டெஸ்டில் விளையாடிய யூனிஸ் கான் சதமடித்தார். அவரைத் தவிர அன்வர், வாசிம் அக்ரம் ஆகியோர் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் குவித்தனர். இதனால், இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து பாகிஸ்தான் தப்பியது. இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 353 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நலையில் ஆட்டத்தைத் தொடர்ந்த இலங்ககை, 4-ம் நாள் டிவில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்திருந்தது. 5-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இலங்கை தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. வக்கார் யூனிஸ், அப்துர் ரசாக் இருவரும் சிறப்பாகப் பந்து வீசி இலங்கையின் வெற்றியை தாமதப்படுத்தினர்.
8 விக்கெட் இழந்த நிலையில் வெற்றியை நோக்கி இலங்கை சிறிதுசிறிதாக முன்னேறியது. ரணதுங்கா, கலுவிதரன இருவரும் நன்று ஆடினர். வக்கார் யூனிஸ் வீசிய பந்தை கலுவிதரன பவுண்டக்கு விரட்டியதன் லம் 220 ரன்கள் எடுத்து இலங்கை வெற்றி பெற்றது.
அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் இலங்கையிடம் பாகிஸ்தான் தோல்வியுற்றது. டெஸ்ட் போட்டியிலாவது வென்று வெற்றிக் கணக்கைத் துவக்கலாம் என்ற பாகிஸ்தானின் எண்ணத்தை இலங்கையின் கடைசி வீரர்கள் தகர்த்து விட்டனர்.
இரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது டெஸ்ட் பெஷாவல் மார்ச் 5-ம் தேதி துவங்குகிறது.












Click it and Unblock the Notifications