For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

பெட்ரோகெமிக்கல் பார்க் அமைக்க மீனவர்கள் கடும் எதிர்ப்பு

திருவள்ளூர்:

திருவள்ளூர் அருகே காட்டுப்பள்ளியில் ரூ 6,000 கோடி செலவில் பெட்ரோகெமிக்கல் பார்க் அமைக்கும் தமிழகஅரசின் திட்டத்துக்கு அப் பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

19 கிராமங்களைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மீனவர்களும், தன்னார்வ அமைப்புகளும் எதிர்ப்புதெரிவித்துள்ளன.

இந்தத் திட்டத்திற்காக தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியிலுள்ள மக்கள் நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக தமிழ்நாடுமாசுக்கட்டுப்பாடு வாரியம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்காவில் உள்ள மீனவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இதற்குஎதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் இதனால் இப்பகுதியில் வாழும் 40, 000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிப்படைவார்கள் என்று அவர்கள்கூறியுள்ளனர்.

இந்தப் பார்க் அமைப்பதால் காட்டுப்பள்ளியிலும், அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் பல வகைப் பாதிப்புகளும்ஏற்படும்.

ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்கும் தொழிலாளர்களுக்கு எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும். இதனால் இந்தத்திட்டத்தை அரசு கைவிடுவதே நல்லது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

யு,என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X