தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கொய்னாவில் மீண்டும் நிலநடுக்கம்
மும்பை:
மகாராஷ்டிராவில் கொய்னா அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தநிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. சேதமும் பெரிய அளவில் இல்லை.
இந்திய வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி 4.2 ரிக்டர் அளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரியவந்தது.
2000-மாவது ஆண்டில் மகாராஷ்டிராவில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திடீரென்று ஏற்பட்டஇந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சரிந்து கீழே விழுந்தன. இந்நிலநடுக்கம் சிலநொடிகளே நீடித்தது.
சம்பவம் கேள்விப்பட்டதும் தீயணைப்புப் படையினர் கொய்னா பகுதிக்குச் சென்று சேதம் ஏதாவதுஏற்பட்டிருக்கிறதா என்ற கண்டறிந்தனர். மிகப்பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அவர்கள்தெரிவித்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications