தமிழகத்தில் இன்று
சென்னை:
"மூலிகை பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளையை ஜாமீனில் விடுதலை செய்ய சென்னை தனி நீதிமன்றம் புதன் கிழமைஉத்தரவிட்டுள்ளது.
மூலிகை மூலம் பெட்ரோல் தயாரித்து விற்பனை செய்து வந்த ராமர் பிள்ளையை மத்திய புலனாய்வுத் துறையினர் (சிபிஐ) மார்ச்11ம் தேதி கைது செய்தனர். மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் ரசாயனம் கலந்து பெட்ரோல் விற்பனை செய்து வருகிறார்என்றும், இதன் மூலம் மக்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளார் என்றும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட ராமர் பிள்ளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக சிறையில் இருக்கும் ராமர் பிள்ளை மீதான வழக்கு சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் தனிநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி ஏ.எஸ்.கண்ணன் வழக்கை விசாரித்து வருகிறார்.
இந்நிலையில் புதன் கிழமை அன்று காவல் நீட்டிப்புக்காக ராமர் பிள்ளையை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர்.அப்போது ராமர் பிள்ளை தமக்கு ஜாமீன் அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.
தமக்குரிய சட்டப்பூர்வ காவல் காலமான 60 நாட்கள் முடிவடைந்து விட்டதாலும், வழக்கில் இன்னம் சிபிஐ குற்றப்பத்திரிக்கைதாக்கல் செய்யாததாலும், தன்னை ஜாமீனில் விடும்படி மனுவில் அவர் கோரியுள்ளார்.
மனுவை ஏற்ற நீதிபதி கண்ணன், அவரை நிபந்னை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி ஒரு லட்ச ரூபாய்க்கான சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனிலும் ராமர் பிள்ளை விடுதலைசெய்யப்பட்டார். 30 நாட்கள் தினம் பகல் 3 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என்றும், தனதுபாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும், வழக்கு முடியும் வரை சென்னையை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும்நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
மூலிகை மூலம் பெட்ரோல் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்து விட்டதாக தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ராமர்பிள்ளை பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தியா முழுவதிலும் இச்செய்தி பெரும் விவாதத்தை கிளப்பியது. மூலிகை மூலம்பெட்ரோல் தயாரிக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
ஆனால், தனது கண்டுபிடிப்பை எந்த அதிகாரிகள் முன்னிலையிலும் செய்து காட்டி நிரூபணம் செய்யத் தயார் என்று ராமர் பிள்ளைஅறிவித்தார். அதன்படி செய்தும் காட்டினார். ஆனால், அதை விஞ்ஞானிகள் நம்ப மறுத்தனர். மூலிகையில் இருந்து பெட்ரோல்தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அறவே இல்லை என்றனர்.
அதன் பின்னர் ராமர் பிள்ளை தனது கண்டுபிடிப்பை "மூலிகை எரிபொருள் என்று பெயர் மாற்றி விற்பனையில் இறங்கினார்.அதற்காக சென்னையில் 15 விற்பனை நிலையங்களை துவக்கினார். முன்பணம் பெற்றுக் கொண்டு விற்பனை ஏஜென்டுகளைநியமித்தார்.
ஆனால், அவர் விற்பனை செய்த எரிபொருளை பயன்படுத்திய வாகனங்கள் பழுதாகின. இந்த புகாரை அடுத்து சிபிஐமேற்கொண்ட அதிரடிச் சோதனையில் தான் ராமர் பிள்ளை கைது செய்யப்பட்டார்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications