தமிழகத்தில் இன்று
சென்னை:
"மூலிகை பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளையை ஜாமீனில் விடுதலை செய்ய சென்னை தனி நீதிமன்றம் புதன் கிழமைஉத்தரவிட்டுள்ளது.
மூலிகை மூலம் பெட்ரோல் தயாரித்து விற்பனை செய்து வந்த ராமர் பிள்ளையை மத்திய புலனாய்வுத் துறையினர் (சிபிஐ) மார்ச்11ம் தேதி கைது செய்தனர். மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் ரசாயனம் கலந்து பெட்ரோல் விற்பனை செய்து வருகிறார்என்றும், இதன் மூலம் மக்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளார் என்றும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட ராமர் பிள்ளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக சிறையில் இருக்கும் ராமர் பிள்ளை மீதான வழக்கு சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் தனிநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி ஏ.எஸ்.கண்ணன் வழக்கை விசாரித்து வருகிறார்.
இந்நிலையில் புதன் கிழமை அன்று காவல் நீட்டிப்புக்காக ராமர் பிள்ளையை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர்.அப்போது ராமர் பிள்ளை தமக்கு ஜாமீன் அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.
தமக்குரிய சட்டப்பூர்வ காவல் காலமான 60 நாட்கள் முடிவடைந்து விட்டதாலும், வழக்கில் இன்னம் சிபிஐ குற்றப்பத்திரிக்கைதாக்கல் செய்யாததாலும், தன்னை ஜாமீனில் விடும்படி மனுவில் அவர் கோரியுள்ளார்.
மனுவை ஏற்ற நீதிபதி கண்ணன், அவரை நிபந்னை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி ஒரு லட்ச ரூபாய்க்கான சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனிலும் ராமர் பிள்ளை விடுதலைசெய்யப்பட்டார். 30 நாட்கள் தினம் பகல் 3 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என்றும், தனதுபாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும், வழக்கு முடியும் வரை சென்னையை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும்நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
மூலிகை மூலம் பெட்ரோல் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்து விட்டதாக தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ராமர்பிள்ளை பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தியா முழுவதிலும் இச்செய்தி பெரும் விவாதத்தை கிளப்பியது. மூலிகை மூலம்பெட்ரோல் தயாரிக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
ஆனால், தனது கண்டுபிடிப்பை எந்த அதிகாரிகள் முன்னிலையிலும் செய்து காட்டி நிரூபணம் செய்யத் தயார் என்று ராமர் பிள்ளைஅறிவித்தார். அதன்படி செய்தும் காட்டினார். ஆனால், அதை விஞ்ஞானிகள் நம்ப மறுத்தனர். மூலிகையில் இருந்து பெட்ரோல்தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அறவே இல்லை என்றனர்.
அதன் பின்னர் ராமர் பிள்ளை தனது கண்டுபிடிப்பை "மூலிகை எரிபொருள் என்று பெயர் மாற்றி விற்பனையில் இறங்கினார்.அதற்காக சென்னையில் 15 விற்பனை நிலையங்களை துவக்கினார். முன்பணம் பெற்றுக் கொண்டு விற்பனை ஏஜென்டுகளைநியமித்தார்.
ஆனால், அவர் விற்பனை செய்த எரிபொருளை பயன்படுத்திய வாகனங்கள் பழுதாகின. இந்த புகாரை அடுத்து சிபிஐமேற்கொண்ட அதிரடிச் சோதனையில் தான் ராமர் பிள்ளை கைது செய்யப்பட்டார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications