For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
55 வயது மருமகனை குத்திக் கொன்ற 85 வயது மாமனார் தலைமறைவு

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பெரிங்கமலா என்ற இடத்தில் நிலத்தைக்கொடுக்க மறுத்த, 55 வயது மருமகனை அவரது 85 வயது மாமனார் வெட்டிக்கொன்றார்.

ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் நடந்தது. இறந்தவர் பெயர் சாகுல் ஹமீது.இதுதொடர்பாக மாமனார் முகம்மது குஞ்சுவை போலீஸார் தேடி வருகின்றனர். அவர்தலைமறைவாக உள்ளார்.

குஞ்சுவின் மகள் ரஹீலா பீவியின் கணவர் இறந்த சாகுல் ஹமீது. இவருக்குச்சொந்தமான 7 சென்ட் நிலத்தைக் கொடுக்குமாறு கூறி சில காலமாக குஞ்சு கேட்டுவந்தார். ஆனால் அதற்கு சாகுல் ஹமீது மறுத்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த குஞ்சு, ஞாயிற்றுக்கிழமை சாகுல் ஹமீது வீட்டுக்குச் சென்று,அங்கிருந்த சாகுல் ஹமீதுவை கத்தியால் குத்திக் கொன்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X