தமிழகத்தில் இன்று
வாஷிங்டன்:
அமெரிக்க பார்லிமென்டை (காங்கிரஸ்) ஒரு நாள் இந்து முறைப்படி மந்திரம் ஓதி, வழிபாடு நடத்தி துவக்கவேண்டும் என ஜனநாயக கட்சியின் எம்.பியான ஷெரோட் பிரவுன் கோரியுள்ளார்.
மதங்களுக்கு சுதந்திரம் அளிப்பதே அமெரிக்காவின் சிறப்பாகும். பல்வேறு மதகுருக்களையும், வேறு பட்டநம்பிக்கை உள்ளவர்களையும் அமெரிக்க நாடாளுமன்றத்தை துவக்கி வைக்க அழைக்க வேண்டும் என்று மேலும்அவர் கூறியுள்ளார்.
நாங்கள் வேறுபட்ட மதங்களிலும் ஒற்றுமையைக் காண்கின்றோம் என்றார்.
அமெரிக்க காங்கிரசார் நாடாளுமன்றத்தை எந்த மதகுருவைக் கொண்டும் வழிபாடு செய்து துவக்கலாம் என்றார்
. இந்த மன்றம் பல்வேறு பட்ட கிறிஸ்துவர்களையும், யூதர்களையும் அழைத்துள்ளது .ஆனால் இதுவரைஇந்துத்மதத்தைச் சார்ந்தவர்களை அழைத்ததில்லை என்று கூறினார்.
நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான இந்து மதத்தைப்ப பின்பற்றுபவர்கள் அமெரிக்காவில் உள்ளனர்.
நாம் மத ஒற்றுமையை காப்பாற்றுவதை நிறைவுசெய்ய இந்து மதத் தலைவர்களையும் அழைக்க வேண்டும் என்றும்அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications