தமிழகத்தில் இன்று
அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ அன்பரசன் மரணம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">புதுக்கோட்டை:
அறந்தாங்கி தொகுதி எம்ஜிஆர் அதிமுக எம்எல்ஏ அன்பரசன் மாரடைப்பால் காலமானார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டசபைத் தொகுதி எம்எல்ஏ அன்பரசன். வயது (58).
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இடைத்தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் திமுக ஆதரவுடன் எம்ஜிஆர் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இருதய நோயால் அவதிப்பட்டு வந்த அவர் ஏற்கனவே திண்டுக்கல்லில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் புதுக்கோட்டையில் தன் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணி அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். பிராண வாயும் செலுத்தப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் இரவு 10.15 மணிக்கு மரணம்அடைந்தார்.
அன்பரசன் எம்எல்ஏ எம்ஜிஆர் அதிமுக கட்சியில் மாநில துணைப் பொதுச்செயலாளராக இருந்தார்.
இவர் புதுக்கோட்டை ராஜகோபால புரத்தைச் சேர்ந்தவர். இவருடைய மனைவி பெயர் செல்லம்மாள்(45), இவர்களுக்கு செந்தில்குமார் என்றமகனும், மலர்விழி என்ற மகளும் உள்ளனர்.
திருநாவுக்கரசு அஞ்சலி:
அன்பரசன் மறைந்த செய்தி தெரிந்ததும் எம்ஜிஆர் அதிமுக பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு புதுக்கோட்டைக்கு விரைந்து சென்று அவருக்கு அஞ்சலிசெலுத்தினார்.












Click it and Unblock the Notifications