தமிழகத்தில் இன்று
ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணம்
விக்ரம ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமையன்று (16.07.2000)நிகழவிருக்கிறது.
இந்த கிரகணம் இந்தியாவில் தெரியும்.
கிரகணம் இந்திய நேரப்படி மாலை 5 மணி 27 நிமிடத்திற்கு தொடங்கி இரவு 8 மணி19 நிமிடத்திற்கு முடிவடையும், கிரகணம் 3 மணி நேரம் 56 நிமிடம் நீடித்திருக்கும்.
1859-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி வந்த சந்திர கிரகணத்திற்குப் பிறகுஇப்போதுதான் நீண்ட கிரகணம் வருகிறது. இந்தியாவின் கிழக்கு மற்றும் வட கிழக்குப்பகுதிகளில் மட்டுமே கிரகணத்தைப் பார்க்க முடியும்.
அகர்தலா, ஐஸ்வால், புவனேஸ்வர், கல்கத்தா, டார்ஜிலிங், காங்டாக், குவஹாத்தி,கொஹிமா, போர்ட் பிளேர், பூரி, ஷில்லாங் ஆகிய இடங்களில் சந்திர கிரகணத்தைமுழுமையாகப் பார்க்க முடியும். இருப்பினும் கிரகணத்தின் முடிவுப் பகுதியை நாடுமுழுவதிலும் பார்க்க முடியும்.
இந்தியா தவிர தென் கிழக்கு ஆசிய நாடுகள், கிழக்கு ரஷியா, ஜப்பான், சீனா, இந்தியப்பெருங்கடல், அன்டார்டிகா, ஹவாய் தீவுகள், கிழக்கு பசிபிக் பெருங்கடல் ஆகியபகுதிகளிலும் கிரகணத்தைக் காணலாம்.
இந்த கிரகணம் பூராடம், உத்திராடம், திருவோணம், கார்த்திகை, உத்ரம்நட்சத்திரங்களில் பிடிக்கிறது.
இந்த நட்சத்திரக்காரர்கள் கோயிலுக்குச் சென்று அரச்சனை செய்வது, பூஜைகளில்ஈடுபடுவது கிரகணத்தால் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளை போக்க உதவும்.
கர்ப்பிணிகள் கிரகணம் சம்பவிக்கும் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வராதிருத்தல்நல்லது
கிரகணம் பிடித்துள்ள நேரத்தில் பித்ருக்களை (இறந்து போன நமது முன்னோர்களை )வழிபடுவது மற்றும் இறை வழிபாடு செய்வது நற்பலன்களைத் தரும்.












Click it and Unblock the Notifications