தமிழகத்தில் இன்று
திவ்யா ------ விஜய் டி.வி நட்சத்திரம். can not tell - ப்ரோகிராமில் மிகவும்கலக்கியவர். இப்பொழுது ஸ்பாட்லைட் என்கிற ப்ரோக்ராமில் ஜமாய்த்துக்கொண்டிருக்கிறார். அடுத்து என்ன ப்ரோக்ராம் என்றால் காதல் சடுகுடு என்றுகுறும்பாக சிரிக்கிறார்.
திவ்யாவின் பேச்சிலும்,சிரிப்பிலும் டோண்ட் வொரி முஸ்தபா என்கிற பாடல்தான்நினைவுக்கு வருகிறது. பேச ஆரம்பித்தவுடனேயே சிரிப்பும் இயல்பாகவே வருவது,எதிரில் இருப்பவரை தன் வசப்படுத்துகிற ரகசியமோ என்னவோ.?!
பிடிச்ச பத்து விஷயங்களைச் சொல்லுங்க திவ்யா என்றோம்..
பிடிச்சது....அட, அந்த யோசிப்பு கூட சிரிப்பு கலந்தே வருகிறது.
1.மெளனம்:
உலகில் உள்ள அற்புதமான பல விஷயங்களில் மெளனம் ஒன்று. மொட்டைமாடி,ஆள் நடமாட்டமில்லாத சாலை, கடற்கரை, இப்படி ஒரு அமைதியான சூழலில்பேசாமல் மெளனமாக இருப்பது ரொம்பப் பிடிக்கும். மெளனத்தின் சக்தி அதிகம். பலநேரங்களில் மெளனமாய் இருப்பது தன்னை உணரவைக்கின்ற விஷயம். மெளனம்பிடிக்கும் என்பதற்காக பேசாமல் இறுக்கமாக இருப்பது கூடாது. மெளனம் என்பது தனிமொழி.
2.குடும்பம்:
ஒருத்தருக்கு குடும்பம் நல்லாயிருந்தா மட்டும்தான்அவர் வெற்றிகரமானவராக இருக்கமுடியும் என்பது என் எண்ணம். குடும்பத்தின் ஆதரவு,ஊக்கம் எல்லோருக்கும்கிடைக்க வேண்டும். அந்த வகையில் நான் லக்கி.
3.புத்தகம்:
Reading makes full man. ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று மணி நேரமாவதுபடிப்பேன். ஒவ்வொரு பக்கங்களிலும் ஒவ்வொரு தகவல். எவ்வளவு சுவாரஸ்யமானவிஷயம் புத்தகம் என்பது. ஆனா ஒன்னு. கண்டிப்பா காலேஜ் புத்தகம் கிடையாதுஎன்று சிரிக்கிறார்.
4.ஷாப்பிங்:
ஒரு இடத்துக்கு போனா அங்க இருக்கிற எனக்கு பிடிக்கிற எல்லாப் பொருளையும்வாங்கிட்டு வரணும்னு ஆசை. புதுசா எதைப்பார்த்தாலும் வாங்கனும். அதைநல்லமுறையில் உபயோகப்படுத்தனும்னும் நினைப்பேன். பல பொருட்களைஉபயோகப்படுத்திக்கொண்டும் இருக்கிறேன்.
5.மாடலிங்:
மாடலிங், பெரிய நுட்பமான விஷயம். அழகை அழகாக்குகின்ற விஷயம். அழகைஒரு எல்லை வரை தொட்டுப் பார்க்கலாம். அழகை கூட்டுகிறோம் என்று மேக்கப்மேக்கப் என்று சென்றால் அதுவே அழகை கெடுத்துவிடும். இயல்பான பொருந்துகிறமேக்கப்போடு மாடலிங் செய்தால் நன்றாக இருக்கும். இருக்கின்ற அழகோடுகொஞ்சமாய் மேக்கப்.
6.இயற்கை:
கொட்டுகின்ற அருவி, பிரம்மாண்டமாய் மலைகள், கடல், நதி என்று இயற்கையைரசிப்தற்கும் கொடுத்துவைக்கவேண்டும். கொடைக்கானல் பிடித்த இடம்.
7.கவிதைகள்:
பொதுவாகவே கவிதைகள் பிடிக்கும். நடந்தவற்றை நடக்க நினைப்பதை மிக எளிதாகநம் உள்ளூணர்வுகளை தட்டிப்பார்க்கின்ற விஷயம் கவிதை என்பது.
8.கிராமங்கள்:
இன்னும் நகரத்து பாஷைகள் கலக்காத அழகு. மக்களிடம் உள்ள இயல்பான பேச்சு,பழக்க வழக்கங்கள், எல்லாம் இயல்பாக இருப்பது அழகான விஷயம்.
9.மியூசிக்:
நம்முடைய எல்லா உணர்ச்சிகளையும் பகிர்ந்து கொள்வது இசை. சோகமா,சந்தோஷமா அதற்கு தகுந்த பாட்டைப்போட்டு விட்டு கண்மூடினால் நம்முடையஉணர்ச்சிகளை அந்த இசை பகிர்ந்து கொள்வது எவ்வளவு பெரிய விஷயம்.?.
10.குரங்கு:
ஆ! இது என்னது? என்று ஆச்சர்யமாக பார்த்தோம். எனக்கு பிடிச்ச விஷயங்களில்குரங்கும் ஒன்னு. குரங்கைப்பார்க்க பார்க்கஅதை அப்படியே பிடிச்சுகிட்டு வந்துவளர்க்கணும்னு ஆசையா இருக்கு. பார்க்கலாம். எதிர்காலத்துல வளர்க்கனும்னுஆசை. தவிர நாய்,பூனைன்னு எல்லாத்தையும் பிடிக்கும்.