தமிழகத்தில் இன்று
"ஓவர் ஸ்பீடு" - பிடிபட்டார் பிரிட்டிஷ் உள்துறை செயலாளர்
லண்டன்:
காரை அதி வேகமாக ஓட்டிச் சென்ற பிரிட்டிஷ் உள்துறைச் செயலாளர் ஜாக் ஸ்ட்ராபோலீஸிடம் பிடிபட்டார்.
பிரதமர் டோனி பிளேர் கலந்து கொள்ளும் கூட்டத்துக்கு ஜாக் ஸ்ட்ரா செல்லவேண்டியிருந்தது. ஆனால், வீட்டில் புறப்படும்போது நேரமாகிவிட்டது.
கூட்டத்துக்கு சரியான நேரத்தில் செல்லவேண்டும் என்பதற்காக, போக்குவரத்துவிதிமுறைகளையும் மீறி மணிக்கு 103 மைல் (165 கி.மீ.) வேகத்தில் அவர் காரைஓட்டிச் சென்றார். அதாவது அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட 33 மைல்கள் அதிகவேகத்தில் அவர் கார் ஓட்டினார்.
இதையடுத்து அவரைப் போக்குவரத்துப் போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.பிரிட்டிஷ் நீதிமன்ற சட்டப்படி 100 மைல்களுக்கு மேல் வேகமாக கார் ஓட்டினால்அவர்களுக்கு கார் ஓட்ட ஆயுள்கால தடை விதிக்கப்படும். மேலும், அதிக அபராதமும்விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே 1993-ம் ஆண்டு இரு முறை அதிக வேகத்தில் கார் ஓட்டியதாக ஸ்ட்ராமீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications