தமிழகத்தில் இன்று
சோதனையில் சிக்கிய சொத்துக்கள் கணக்கெடுப்பு திங்கள் முதல் ஆரம்பம்
டெல்லி:
கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வாரிய முன்னாள் நிர்வாகிகள், புக்கிகளின் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட,முடக்கப்பட்ட சொத்துக்கள் குறித்த கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை முதல் துவங்கும் என்று வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கிரிக்கெட் வீரர்களின் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இரண்டு நாட்கள் இந்த சோதனைகள் நடந்தன. இந்த சோதனையின்போது ஏராளமானசொத்துக்கள், தஸ்தாவேஜ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை குறித்து திங்கள்கிழமை முதல் கணக்கெடுப்பு நடத்த வருமான வரித் துறை அதிகாரிகள்திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து வருமான வரித்துறை விசாரணைப் பிரிவு இயக்குநர் எஸ்.சி.பாரிஜா கூறுகையில், சம்பந்தப்பட்டவர்கள் முன்னிலையில் கணக்கெடுக்கும் பணிநடைபெறும். இதுதொடர்பான பணிகள் முடிய 60 நாட்கள் ஆகும் என்று நினைக்கிறோம்.
இரண்டு மாத முடிவில், சோதனை நடத்தப்பட்டவர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும். 45 நாட்களுக்குள் அவர்கள் அதற்குப் பதிலளிக்கவேண்டும் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications