தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

கள்ளச்சாராயத்திற்கு விவசாயி பலி

சேலம்:

சேலம் மாவட்டம் கொளத்தூரில் கள்ளச்சாராயம் குடித்த விவசாயி இறந்தார்.

சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது. அவ்வப்போது கணிசமான மாமூல் தொகைவெட்டுவதால் போலீசார் இதுபற்றி கண்டுகொள்வதில்லை. இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்த ஒரு விவசாயி இறந்துள்ளார்.

ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் விவசாயம் செய்து வந்தவர். வயது 65. ராமசாமி அடிக்கடி கொளத்தூருக்குச் சென்று சாராயம்குடித்துவிட்டு வருவது வழக்கம்.

இந்த நிலையில், ராமசாமிக்கு விவசாயக் கடனாக ரூ. 511 கிடைத்தது. அதை எடுத்துக் கொண்டு வழக்கம்போல் கொளத்தூர் சென்று சாராயம் குடித்தார்.குடித்த சிறிது நேரத்திலேயே அவர் சாராயக்கடை அருகேயுள்ள தனியார் பள்ளியின் கேட் அருகே சுருண்டு விழுந்து இறந்தார்.

இதுகுறித்து போலீசாருக்குத் தெரிவித்தால் பிரச்சனையாகிவிடும் என்று கருதி ராமசாமியின் உறவினர்கள் அவரது பிணத்தை எடுத்துச் சென்று சம்பிரதாயசடங்குகளைச் செய்து புதைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

இந்நிலையில் ராமசாமி கள்ளச்சாராயம் குடித்ததால் தான் இறந்தார் என்று அரசு மேலதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக இதுகுறித்துவிசாரிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. போலீஸ் விசாரணையில், ராமசாமி கள்ளச்சாராயம் குடித்து இறந்தார் என்று போலீசாருக்குத் தெரியவந்தது.

ஆனால் போலீசார், இதுகுறித்து அரசு உயர்அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில், ராமசாமி ஏற்கனவே நோய்வாய்ப்பட்டவர். சம்பவத்தன்று அவர்அளவுக்கதிகமாக ஒயின்ஷாப்புக்குச் சென்று மது குடித்துள்ளார். அதனால்தான் இறந்தார். இது கள்ளச்சாராய சாவு அல்ல என்று குறிப்பிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+