தமிழகத்தில் இன்று
அரசியலில் நீடிப்பேன் என்கிறார் தமிழக சபாநாயகர்
மதுரை:
முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கு இணங்க தொடர்ந்து அரசியலில்நீடிப்பேன். அடுத்த சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிடுவேன் என்று தமிழகசட்டசபை சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் கூறியுள்ளார்.
மதுரையில் நடந்த வர்த்தகர் சங்க நிகழ்ச்சியில் பழனிவேல்ராஜன் பேசுகையில், எனதுஅரசியல் வாழ் விரைவிலேயே முடித்து விடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அப்போது, கடந்த சட்டசபைக் கூட்டத்தின்போது ஒரு நாள்,முதல்வர் கருணாநிதி என்னைக் கூப்பிட்டார்.
அவரும் நானும், ஒரு அறையில் தனியாகப் பேசினோம். என்னிடம், சபாநாயகர்உள்பட பல பதவிகளை வகித்து விட்டீர்கள். உங்களது தேவையை நிறைவேற்றாமல்நான் இருந்ததில்லை. இப்போது என்ன பிரச்சினை உங்களுக்கு? ஏன் அரசியலில்இருந்து ஓய்வு பெறப் போகிறேன் என்கிறீர்கள்? என்றார்.
குறை என்று எதுவும் என்னிடம் இல்லை. அப்படி இருந்தால் இன்று இப்பதவியில்இருந்திருக்க மாட்டேன் என்றேன். அதற்கு முதல்வர், பிறகு எதற்காக நீங்கள் ஓய்வுபெற வேண்டும். என் வயதைப் பாருங்கள். இன்னும் எதற்காக அரசியலில்இருக்கிறேன். உங்களைப் போன்றவர்கள் இருக்கும் பலத்தினால்தானே. நீங்கள்எல்லாம் போய்விட்டால், பின் நான் எப்படித் தேர்தலில் போட்டியிட முடியும் என்றார்.
அவரது பேச்சில் உருகி விட்டேன். முதல்வர் கருணாநிதி, இந்த வயதிலும் தினமும் 20மணி நேரம் வரை உழைக்கிறார். இவரைப் போன்ற தேசியச் சிந்தனை படைத்த ஒருதலைவர் முன்பும் இருந்ததில்லை. இனியும் வரப் போவதில்லை என்றார் அவர்.