தமிழகத்தில் இன்று
"பேச்சுவார்த்தைக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் சம்மதிப்பார்கள்
சென்னை:
மத்திய அரசின் அழைப்பை ஏற்று ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்புத் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அத்வானிநம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை விமானநிலையத்தில் அத்வானி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பாகிஸ்தான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதின் கடந்த ஜூலை 23 ம் தேதி போர்நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது. அதிலிருந்து காஷ்மீரில் வன்முறைச்செயல்கள் பெருமளவு குறைந்துள்ளது.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்று மத்திய அரசுநம்புகிறது.
ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாத அமைப்பு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற அமைப்பாக இருந்தாலும், அவர்கள் காஷ்மீரில் வசிப்பதால் அவர்களும் காஷ்மீர்குடிமக்களே. நம்நாட்டு மக்களுடன் நாம் பேசுவதற்கு எந்தத் தடையுமில்லை.
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புக்களான லஷ்கர்-ஈ-டோய்பா, ஹர்கத் உல் முஜாஹிதின் அமைப்புக்களுடன் இந்தியா ஒரு போதும்பேச்சுவார்த்தை நடத்தாது என்று கூறினார் அத்வானி.
பின்னர் அவர் பாண்டிச்சேரி புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து சனிக்கிழமை மாலை டெல்லி திரும்புகிறார்.
யு.என்.ஐ.