தமிழகத்தில் இன்று
இலங்கைத் தமிழர்களுக்கு வெற்றி நிச்சயம் என்கிறார் ராமதாஸ்
தூத்துக்குடி:
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் ஈழம் கிடைப்பது சர்வ நிச்சயம் எனபாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் டாக்டர்.ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் மாநாடு தூத்துக்குடியில் வியாழனன்றுநடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ் இவ்வாறு கூறினார்.
தமிழர்கள் உலகில் எந்த பாகத்தில் துன்பத்திற்கு ஆளானாலும் அவர்கள் உரிமைக்காககுரல் கொடுப்போம். இலங்கையில் 17 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் உரிமைகேட்டு போர் புரிந்து வருகின்றனர்.
ஆனால் தமிழகத்தில் உள்ள தலைவர்கள் இலங்கையில் சிங்களர்களுடன் சேர்ந்துதமிழர்கள் வாழ வேண்டும் என்கின்றனர். இது எவ்வாறு சாத்தியமாகும்.
இலங்கை அதிபர் தவறான பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்.அடிப்படை உரிமை உட்பட எல்லா உரிமைகளும் இலங்கையில் வாழும்தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தான் கூறிவருகிறோம். இலங்கையில்தமிழர்கள் தமிழீழம் பெறுவதை எவரும் தடுக்க முடியாது என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications