தி.மு.கவுக்குத் தாவுகிறார் அ.தி.மு.க எம்.பி.
கோவில்பட்டி:
அ.தி.மு.க வில் இருந்து விலகியவர்களுடன் வரும் 15 ம் தேதி தி.மு.க வில் இணைய விருப்பதாக கோவில்பட்டி அதிமுக எம்.பி.ராஜேந்திரன் அறிவித்தார்.
கோவில்பட்டி என் ராஜேந்திரன் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் மா.த.மூர்த்தி, ஜெயலலிதா பேரவை நகரச்செயலாளர் சவுந்தர்ராஜன், எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் கணேசன், தலைவர் பாலமுருகன், உள்ளிட்ட பலர் அ.தி.மு.க வில் இருந்து விலகி, தி.மு.க வில்இணைய முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து அவர் கூறியதாவது:
அ.தி.மு.க வை, எம்.ஜி.ஆர் துவக்கியதிலிருந்தே கட்சியில் செயலாற்றி வருகிறேன். அ.தி.மு.க வில் தற்போது கட்சிக்காக உழைத்து வருபவர்களுக்குஎந்த மரியாதையும் அளிக்கப்படுவது இல்லை. அதனால்தான் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளேன்.
என் தலைமையில் கோவில்பட்டி வட்டத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் வரும் 15 ம் தேதி சென்னையில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க வில்இணைகிறோம்.
தி.மு.க வில் இணைந்தபின், முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டால் எனது ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்றார்ராஜேந்திரன்.