சாதிக் கட்சிகள் கவலை அளிக்கின்றன .. லத்தீப்
மதுரை:
தமிழத்தில் சாதிக் கட்சிகள் அதிகரிப்பது கவலை தருவதாக இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் அப்துல் லத்தீப் கூறினார்.
மதுரையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்திலும் இந்திய அளவிலும் மதச்சார்பற்ற கட்சிகளை வலுப்படுத்த வேண்டும். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே மதச்சார்பற்றகட்சிகளை ஒன்றிணைத்து அவற்றை வலுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தலின்போதுதான் மதச்சார்பற்ற கட்சிகள் விழித்துக்கொள்ளும் நிலை உள்ளது. கூட்டணி ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றுதான்அவை நினைக்கின்றவே தவிர ஒற்றுமையின் அவசியத்தை அவை உணர்வதில்லை.
தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற கட்சிகளின் ஒன்றிணைத்து மதச்சார்பற்ற முன்னணி ஏற்படுத்துவது பற்றி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனார்உள்பட பிற கட்சித் தலைவர்களை விரைவில் சந்தித்துப் பேச உள்ளேன்.
மதவாதக் கட்சியான பாரதீய ஜனதாவுடன் கூட்டு வைத்துள்ள எந்த கட்சியுடனும் இந்திய தேசிய லீக் உறவு வைத்துக் கொள்ளாது.
தமிழகத்தில் சாதி அடிப்படையிலான கட்சிகள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.
அத்தகைய சாதி அடிப்படையிலான கட்சிகளும், மதவாத சக்திகளும் சேர்ந்து நாட்டின் மதச்சார்பற்ற நிலைக்கு ஆபத்தை ஏற்படுத்துவிடும் என்றார் லத்தீப்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications