காளிமுத்துவிடம் மீண்டும் "சிக்கிய இளங்கோவன்
சென்னை:
வீரப்பன் விவகாரத்தில் மோதிக் கொண்ட அ.தி.மு.க.,காங்கிரல் தலைவர்கள்மறுபடியும் மோத ஆரம்பித்துள்ளனர். அ.தி.மு.க. அவைத்தலைவர் காளிமுத்துவிடுத்துள்ள புதிய அறிக்கையில். தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை விமர்சித்துள்ளார்.
சனிக்கிழமை காளிமுத்து வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
உலக மகா கிரிமினல் சந்தன மரக் கடத்தல்காரன் வீரப்பனின் நாடகத்தை உரியசாதுர்யத்தோடு முடிவுக்கு கொண்டு வராமல் அவன் இழுத்து இழுப்புக்கெல்லாம்பணிந்து போகும் தமிழக, கர்நாடக அரசுகளிந் கையாகாலத்தனத்தை கண்டித்த எங்கள்கழக பொதுச் செயலாளர் புரட்டித்தலைவி இரு மாநில அரசுகளும் ராஜினாமா செய்யவேண்டும் என்று கூறினார்.
அந்தக் கருத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளிக் கிழமையன்று உச்ச நீதிமன்றம்கூறிய கருத்தை சிறுபிள்ளைத் தனம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்இளங்கோவன் கூறுவாரா?
சந்தனமரக்கடத்தல்காரன் வீரப்பனும், தமிழக முதல்வர் கருணாநிதியும் சேர்ந்துகொண்டு கடந்த 34 நாட்களாக நடத்திவரும் ராஜ்குமார் கடத்தல் நாடகத்தை ஒருமுடிவுக்கு கொண்டு வராமல் இழுத்தடித்துக் கொண்டு வருகின்றனர்.
கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவை பதவி விலகச் சொன்னால், அந்த அதிகாரம்சோனியாவுக்குத்தான் உண்டு என்று ஆர்ப்பரித்த இளங்கோவனைக் கேட்கிறேன். உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் கர்நாடக அரசை ராஜினாமா செய்யவேண்டும் என்று சொல்லி இருப்பதை சிறு பிள்ளைத்தனம் என்றோ, குழந்தைத்தனம்என்றோ சொல்வாரா?
கர்நாடக முதல்வரை பதவி விலகச் சொல்லும் அதிகாரம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்குஇல்லை என்று இளங்கோவன் சொல்வாரா? என்று கேள்வியெழுப்பி அறிக்கைவெளியிட்டுள்ளார் காளிமுத்து.












Click it and Unblock the Notifications