கூட்டணி ஆட்சி: அதிமுக-த.மா.கா. சண்டை தொடர்கிறது
சென்னை:
மீண்டும் அதே சர்ச்சை கிளம்பியுள்ளது. கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் தமாகா உறுதியாக நிற்கிறது என்று மூப்பனார் மீண்டும்வலியுறுத்தியுள்ளார்.
இதற்ககு அ.தி.மு.க. சார்பில் பதிலளித்துள்ள காளிமுத்து "கூட்டணி ஆட்சியால் குழப்பமே ஏற்படும் என்று கடுமையாக எதிர்த்துள்ளார்.
குற்றாலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த த.மா.கா. தலைவர் மூப்பனார், ""தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் ஏற்பட வேண்டும் என்று நாங்கள்ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதில் இப்போதும் உறுதியாக இருக்கிறோம்.
அதிமுகவுடன் கூட்டணி பற்றி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. மதச்சார்பற்ற சக்திகள் என்ற முறையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி பற்றி முடிவு எடுப்போம். தேர்தலுக்கு இன்னும் அதிக நாட்கள் உள்ளன என்று கூறி மீண்டும் கூட்டணி ஆட்சிபற்றிய சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளார்.
அதற்கு திருச்செந்தூரில் இருந்த அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து உடனடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வழக்கமாக அதிமுகவில் ஜெயலலிதாவை தவிரமற்ற தலைவர்கள் செய்தியாளர்களை சந்திப்பதில்லை. ஆனால், மூப்பனார் கருத்துக்கு பதிலடி கொடுப்பதற்கு மட்டும் காளிமுத்துவுக்கு ஸபெஷல் அனுமதிதரப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
திருச்செந்தூரில் காளிமுத்து கூறுகையில்,
கூட்டணி ஆட்சி என்பது மூப்பனாரின் சொந்த ஆசை. அப்படி ஆசைப்படுவதில் தவறில்லை தான். ஆனால், நடைமுறை நிலைமையைப் பார்த்தால் தமிழகத்தில்கூட்டணி ஆட்சி கலாச்சாரமே கிடையாது.
எந்த தீர்ப்பு வழங்கினாலும் கும்மிடிப்பூண்டியில் இருந்து குமரி வரை ஒரே தீர்ப்பை தான் தமிழக மக்கள் வழங்கி வருகின்றனர்.
கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் வாக்குகள் சிதறவிடாமல் இருப்பதற்கே தவிர, ஆட்சி நாற்காலியை பகிர்ந்து கொள்வதற்காக அல்ல. அப்படிகூட்டணி போட்டு ஆட்சி அமைத்தால் குழப்பமே விளையும்.
தனித்து ஆட்சி அமைத்தால் தான் கொள்கைகளை நிறைவேற்ற இயலும். இதையெல்லாம் உணர்ந்து தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா முடிவுக்கு தமாகாஉள்ளிட்ட கட்சிகள் கட்டுப்படும் என்று கூறினார் காளிமுத்து.












Click it and Unblock the Notifications