கோவையில் இந்து முன்னணி பந்த் .. பஸ் கண்ணாடி உடைப்பு
கோவை:
கோவையில் இந்து முன்னணி, பந்த் அறிவிப்பை திடீரென வாபஸ் பெற்றது. ஆனால்சில இடங்களில் நடந்த கல்வீச்சில் 4 பஸ்களின் கண்ணாடிகள் நொறுங்கின. நகரின்மாமூல் வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
சென்னையில் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த முயன்ற இந்துமுன்னணித் தலைவர் ராமகோபாலன் கைது செய்யப்பட்டு விடுதலையானார்.
இதையடுத்து கோவையில் கடையடைப்பு நடத்த இந்து முன்னணி அழைப்புவிடுத்திருந்தது. எனவே, தொண்டர்கள் சுந்தராபுரம், மதுக்கரை போன்ற இடங்களில்கல்வீச்சில் இறங்கினர். இதில் இரண்டு அரசு பஸ்களின் கண்ணாடிகள் நொறுங்கின.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பல இடங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகஇந்து முன்னணித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த கைதையடுத்து, இந்துமுன்னணி அமைப்பு, தனது பந்த் அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்தது.இதனால் கோவையில் பந்த், எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. நகரவாழ்க்கை மாமூலாகவே இருந்தது.












Click it and Unblock the Notifications