இலங்கையில் தமிழ் வேட்பாளர் உள்பட 2 பேர் சுட்டுக்கொலை
கொழும்பு:
இலங்கையில் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர் உள்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
முஸ்லீம்கள் அதிகமாக வாழும் மட்டக்களப்பு, கல்முனை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இப்படுகொலைச் சம்பவம் நடந்தது. சுட்டுக் கொல்லப்பட்டவர்மக்கள் கூட்டணி வேட்பாளர் பெயர் செல்லையன் பெரியநாயகம். அவரது ஆதரவாளர் மனோகரன் பிள்ளை.
மக்கள் கூட்டணியின் மட்டக்களப்புப் பிரிவு தலைவர் சோமசுந்தரம் கணேசமூர்த்தி இதுகுறித்துக் கூறுகையில், இந்தப் படுகொலையை முஸ்லீம் ஜிஹாத்அமைப்பினரே செய்திருக்க வேண்டும் என்றார்.
மக்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சி இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி. இதன் ஆயுதம் தாங்கிய பிரிவுதான் முஸ்லீம் ஜிஹாத் அமைப்பு.
மக்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிலேயே இரண்டாவது மிகப் பெரிய கட்சி இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்தான். இக்கட்சியினர் தாக்குதல்கள்மற்றும் வன்முறையில் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே, ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த புதன்கிழமை, ஈழம் மக்கள் ஜனநாயகக் கட்சியினரின் பயமுறுத்தலால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி கட்சி வேட்பாளர்கள் இருவர்வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். அதற்கடுத்த நாள் தமிழ் ஈழ விடுதலை அமைப்பின் வேட்பாளர் ஒருவரும் மிரட்டலுக்குப் பயந்து வேட்புமனுவை வாபஸ்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனுத்தாக்கல் செய்த வேட்பாளர்களில் கொலை செய்யப்பட்டுள்ள முதல் வேட்பாளர் செல்லையன்தான். இதற்குமுன் நடந்த தேர்தல் தொடர்பானவன்முறைகள் மற்றும் மனுத்தாக்கலின் போது ஏற்பட்ட மோதல்களில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.