உடுமலை குண்டுவெடிப்பு வழக்கு .. அரசு வக்கீல் வாபஸ்
கோவை:
உடுமலைப் பேட்டையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக ஆஜரான அரசு தரப்பு வக்கீல் இந்த வழக்கில் வாதாடுவதிலிருந்து விலகினார்.
இதற்கான கடிதத்தை திங்கள்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டையில் கடந்த 1997ம் ஆண்டு டிசம்பர் மாதம் சைக்கிள் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் நான்குபேர் இறந்தனர்.
இந்த வழக்குத் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வருகிறது. இந்த வழக்கில் திங்கள்கிழமை குற்றம்சுமத்தப்பட்ட அப்துல் கரீம், சுல்தான், நாசர் உட்பட 10 பேர் ஆஜர் செய்யப்பட்டனர்.
தனி நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜி. சவுந்தர்ராஜன் ஆஜராகி வந்தார். ஆனால், திங்கள்கிழமை அவர் நீதிபதிதணிகாசலத்திடம், ஒரு கடிதத்தை அளித்தார்.
அந்தக் கடிதத்தில், இந்த வழக்கில், தனது குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த வழக்கில் தொடர்ந்து வாதாட இயலாத நிலையில் இருப்பதாகத்தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏற்கனவே, மாநில உள்துறைச் செயலர் சாந்தாஷீலா நாயர், மற்றும் சி.பி.சி.ஐ.டி பிரிவின் ஐ.ஜி பரம்வீர் சிங்கிற்கும் தகவல்தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை நீதிபதி தணிகாசலம், செப்டம்பர் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்த வழக்கில் இனி புதிதாக அரசு தரப்புவக்கீல் நியமிக்கப்படவுள்ளார்.












Click it and Unblock the Notifications