தர்மபுரி என்ஜீனியர் பெங்களூரில் தற்கொலை
பெங்களூர்:
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜீனியர் பெங்களூரில் 12-வது மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரியைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். பெங்களூர் கோரமங்களாவிலுள்ள போஸ்க் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். எச்.ஏ.எல். பகுதியில் உள்ளசாஸ்திரி நகரில் வீடு எடுத்துத் தங்கியிருந்தார்.
வியாழக்கிழமை காலை எம்.ஜி.ரோட்டிலுள்ள ரஹேஜா டவருக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்த 12-வது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலைசெய்து கொண்டார்.
சுவாமிநாதன் தற்கொலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன.
காதல் தோல்விதான் இதற்குக் காரணம் என்று முதலில் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்கொலைக்கு முன் சுவாமிநாதன் கீழேநிறுத்தி வைத்திருந்த அவரது மோட்டார் சைக்கிளைக் காணவில்லை. இதனால் வேறு காரணம் ஏதும் இருக்கலாம் என்று போலீஸார்சந்தேகிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications