ஹசீனா "கமெண்ட் ... முஷாரப் "உர்ர்
கராச்சி:
பாகிஸ்தான் குறித்து வங்கதேசப் பிரதமர் ஹசீனா வஜித் தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.
கராச்சியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஒரு நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சியைப் பிடிக்கும் சக்திகளை அழிக்கவேண்டும் என்றும் பாகிஸ்தானுக்கு எதிராகமேலும் சில கருத்துக்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் மில்லேனியம் உச்சி மாநாட்டில் ஹசீனா பேசினார்.
இது கடுமையான கண்டனத்துக்குரியது. ஹசீனா கூறியதுபோல் பாகிஸ்தானில் ஜனநாயகம் ஒன்றும் அவ்வளவு மோசமாக சீரழிந்துவிடவில்லை.பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரத்தில் வெளி நபர்கள் தலையிடுவதை பாகிஸ்தான் விரும்பவில்லை.
ஹசீனா கூறிய கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்தான் ஹசீனாவுடன் நடைபெற இருந்த சந்திப்பை நான் ரத்து செய்துவிட்டேன்.
பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் ஆட்சியைக் கவிழ்த்து அங்கு புதிதாக ராணுவ ஆட்சியை ஏற்படுத்தியபோது தெரிவித்த கருத்துக்கு மாற்றாக ஹசீனாஇப்போது புதிய கருத்தைக் கூறியுள்ளார். இது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.
1971-ம் ஆண்டு நடந்த போரில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் ஏராளமான வங்கதேச மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தான் மன்னிப்புக்கோரவேண்டும் என்று ஹசீனா கூறியுள்ளார்.
இதுவும் நடக்காது. கடந்த காலத்திலும் 1971-ம் ஆண்டிலும் நடந்த சம்பவங்களை மறந்துவிட்டு எதிர்காலத்தை நோக்கி நடைபோடவே நாங்கள்முயற்சிக்கிறோம் என்றார் முஷாரப்.












Click it and Unblock the Notifications