ஜெ.வுக்கு அடுத்த சோதனை ஆரம்பம்
சென்னை:
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது சுமத்தப்பட்டுள்ள நிலக்கரி ஊழல் வழக்குத் தொடர்பான விசாரணை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு மின்வாரியத்திற்காக வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததன் மூலம் அரசுக்கு 6.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், முன்னாள் தலைமைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன், முன்னாள் நிதித்துறை செயலர்நாராயணன் உள்பட 11 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர்.
சென்னை 2 வது தனிநீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது. கடந்த 99 ம் ஆண்டு ஜூன் மாதம் 16 ம் தேதி இவ்வழக்கில்குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டபோது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, மறைந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனஅஆகியோரை 2 வது தனிநீதிபதி ராதாகிருஷ்ணன் விடுவித்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்,ஜெயலலிதா வழக்கை சந்திக்க வேண்டும்என்று உத்தரவிட்டது.
இதையடுத்து ஜெயலலிதா மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின் 9 மாதங்களுக்குப் பின்இவ்வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஜெயலலிதா தரப்பில் வக்கீல் ஜோதி, சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்தார். அதன்பின்வழக்கு அடுத்தமாதம் 2 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications