ஜனநாயகம் தழைக்க நாள் குறிக்கிறார் முஷாரப்!
லாகூர்:
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நீண்டகாலமாக இருந்து வரும் காஷ்மீர் பிரச்சனையைத் தீர்த்து வைக்கக் கிடைத்த வாய்ப்பை இந்தியா நழுவவிட்டு விட்டது என்று பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.
முஷாரப், பாகிஸ்தானில் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்து ஒரு ஆண்டு நிறைவடைகிறது. இதையடுத்து இஸ்லாமாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டமுஷாரப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராணுவம் ஆட்சிப் பொறுப்பில் நீண்ட காலம் இருக்காது. இன்னும் இரண்டு ஆண்டுகளில், அதாவது2002-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதிக்குள் பாகிஸ்தானில் மீண்டும் ஜனநாயகம் தழைக்கும்.
சில சக்திகள் பாகிஸ்தான் வளர்ச்சிப் பாதையில் செல்வதைக் காணப் பொறுக்காமல் சதி வேலைகளில் ஈடுபடுகின்றன. ராணுவ அரசு ஊழலை ஒழிக்கஎடுத்த நடவடிக்கைகள் நல்ல பலன்ை கொடுத்துள்ளன.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், பல்லாண்டுகளாகப் பதட்டம் நிலவி வருகிறது. இரு தரப்புக்கும் இடையலிான மோதலில், ராணுவவீரர்கள், தீவிரவாதிகள், அப்பாவிப் பொதுமக்கள் என்று பலர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க சம்பந்தப்பட்ட இருநாடுகளும் முயற்சித்தால் மட்டுமே சுமூகமான நிரந்தரத் தீர்வு காண முடியும். சமீபத்தில் ஹிஸ்புல்மூஜாஹிதின் தீவிரவாத அமைப்பு போர்நிறுத்தம் அறிவித்து, பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால், பாகிஸ்தானையும் பேச்சுவார்த்தையில் சேர்க்க வேண்டும் என்று ஹிஸ்புல் நிபந்தனை விதித்தது. இதை இந்தியா நிராகரித்ததையடுத்து போர்நிறுத்தம்வாபஸ் பெறப்பட்டது. இதனால் காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை இந்திய நழுவ விட்டு விட்டது.
ஆப்கானிஸ்தான் விவகாரம் என்றால் உடனே அனைத்து நாடுகளும் அதற்கு மூலகாரணமாக பாகிஸ்தானையே நினைக்கின்றன. அதை விட்டுவிட்டுஉலக நாடுகள் தலிபான் அமைப்பிடம் நேரடித் தொடர்பு கொள்ள முயல வேண்டும்.
சில பத்திரிக்கைகளில், பாகிஸ்தானில் நிலவும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற காரணங்களால் மக்கள் தங்கள் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு பிற நாடுகளுக்கு இடம் பெயருகிறார்கள் என்று செய்திகள் வெளியிடப்படுகின்றன. இது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது என்றார்முஷாரப்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications