ராஜ்குமாருடன்தான் திரும்பி வருவேன் .. கோபால்
சென்னை:
ஐந்தாவது முறையாக காட்டுக்குச சென்றுள்ள அரசு தூதர் நக்கீரன் கோபால் இம்முறைநிச்சயம் ராஜ்குமாரை மீட்டுவருவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்பதுதொடர்பாக அரசு தூதராக நக்கீரன் கோபால் ஐந்தாவது முறையாக காட்டுக்குள்சென்றுள்ளார். இம் முறை அவருடன் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன்,பேராசியர் கல்யாணி, மனித உரிமைக் கழக தலைவர் சுகுமாறன் ஆகியோரும்சென்றுள்ளனர்.
கோபால் உட்பட அனைவரும் காட்டுக்குள் வெள்ளிக்கிழமையன்று காட்டுக்குள்நுழைந்தனர் என நக்கீரன் துணை ஆசிரியர் காமராஜ் தெரிவித்தார்.
இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோபால் என்னை வியாழக்கிழமைஇரவு தொடர்பு கொண்டு பேசியபோது, வீரப்பனின் தூதர் என்னை தொடர்புகொண்டுள்ளார். காட்டில் கடும் மழை பெய்வதால் உள்ளே செல்ல முடியவில்லைஎன கூறினார்.
வெள்ளிக்கிழமை இரவு என்னை தொடர்பு கொண்ட கோபால். தம்பிசிவசுப்ரமணியம், நான், நெடுமாறன், சுகுமாறன், பேராசிரியர் ஆகியோர் வீரப்பன்தூதருடன் காட்டுக்குள் சென்று கொண்டிருக்கிறோம். இந்த முறை நிச்சயாகராஜ்குமாரை மீட்டு வருவேன் என கூறினார் என அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.