புதுவை கடலில் மூழ்கி இரு இளைஞர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
புதுவை:
புதுவை கடலில் இரு இளைஞர்கள் மூழ்கி இறந்தனர். இச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமைபிற்பகல் நடந்தது.
விடுமுறை நாளானதால் நிறைய இளைஞர்கள் புதுவை கடற்கரைக்கு வந்து குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது கடல் அலைகள் அதிகம் இருந்தன.
கடலில் குளித்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் திடீரென்று அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டனர். அவர்களைக் காப்பாற்ற அவர்களது நண்பர்கள் முயன்றனர்.ஆனால், முடியவில்லை. இருவரும் கடலில் மூழ்கி இறந்தனர்.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சடலங்களைத் தேடி வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications