குரோனியே மீதான ஆயுள்கால தடை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
ஜோஹன்னஸ்பர்க்:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்பட்டு, ஆயுள் கால தடைவிதிக்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஹன்சிகுரோனியே மீதான ஆயுள் கால தடை உத்தரவு முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது,
ஐக்கிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெள்ளிக்கிழமை இதுதொடர்பானஅறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், குரோனியே மறுவாழ்வு பெறவாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
ஆயுள் கால தடை விதிக்கப்பட்டு, அதுதொடர்பான மேல் குரோனியே பதிலுக்காக சிலகாலம் கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் குரோனியே தரப்பில் எந்தவிதமானபதிலும் அளிக்கப்படதாதால், தடை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி போலீஸால் குரோனியே குரல் அடங்கிய ஆடியோ கேசட்டை சிலமாதங்களுக்கு முன்பு வெளியிட்டனர். அதில் கிரிக்கெட் புக்கி ஒருவருடன்குரோனியே பேசியது தெரிய வந்தது. இதையடுத்து அவர் அணியிலிருந்துநீக்கப்பட்டார், அவர் மீது விசாரணை நடத்த கமிஷன் அமைக்கப்பட்டது.விசாரணையில் தனது தவறை குரோனியே ஒத்துக் கொண்டார்.
விசாரைணயின் முடிவில், ஆயுள் காலம் முழுவதும் கிரிக்கெட் விளையாடகுரோனியேவுக்குத் தடை விதிக்கப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.