அமெரிக்க ராணுவ அதிகாரிகள் இந்தியா வருகை
டெல்லி:
அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகன் உயர் அதிகாரிகள், செவ்வாய்க்கிழமை இந்தியா வருவதாக பாதுகாப்பு அமைச்சகம்தெரிவித்துள்ளது.
இந்தியா வரும் பென்டகன் அதிகாரிகள், பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா- அமெரிக்கா ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விவாதிப்பார்கள். அமெரிக்கதிட்டமிடுதல் துறை முதன்மை உதவி செயலாளர் ஜேம்ஸ் பாட்னரும், பென்டகன் அதிகாரிகளுடன் வருகிறார்.
1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்தியா, அணு குண்டு வெடித்து சோதனை நடத்தியது. இதையடுத்து இந்தியா மீது அமெரிக்காபொருளாதாரத் தடை விதித்தது.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான இரு நாடுகளின் பரிவர்த்தனைகளும் அடியோடு நின்று போனது. இந்த நிலையில், பொருளாதாரத் தடைவிதிக்கப்பட்ட பின், அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும்.
கடந்த மார்ச் மாதம் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் இந்தியாவிற்கு வந்தார். அதற்குப் பின் பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க ராணுவ தளபதிஅட்மிரல் டெனிஸ் பிளேர் உள்பட பல ராணுவ தளபதிகள் இந்தியா வந்தனர்.
இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் பிரதிநிதிகள் சேர்ந்த கூட்டுக் குழு கடந்த பிப்ரவரி மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. சர்வதேச அளவில்பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இக்குழு நடவடிக்கை எடுக்கும்.
ஐ.ஏ.என்.எஸ்.