சாதனைக்குத் தயாராகிறார் ஆலன் டொனால்ட்
புளோம்பான்டைன்:
தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஆலன் டொனால்ட், 300-வது விக்கெட்டைவீழ்த்தி சாதனைப் புத்தகத்தில் இடம்பெற தயாராகி வருகிறார்.
300 விக்கெட்டுகளை வீழ்த்த இன்னும் 3 விக்கெட்டுகளே டொனால்டுக்குத்தேவைப்படுகிறது. தற்போது தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ளநியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரிலேயே அதை டொனால்ட் சாதிப்பார்என்று தெரிகிறது.
இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமைபுளோம்பான்டைன் நகரில் துவங்குகிறது.
தென் ஆப்பிரிக்க அணியில் விளையாடத் துவங்குவதற்கு முன்பு, அவர்இங்கிலாந்திலுள்ள வார்விக்ஷயர் அணியில் விளையாடி வந்தார். அணியில்சேர்ந்தபிறகு ஒரு போட்டியில சராசரியாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வந்துள்ளார்.
300 விக்கெட்டோடு நின்று விடாமல், 400 விக்கெட்டுகளுக்குக் குறி வைப்பதாகமுன்பே டொனால்ட் கூறியுள்ளார்.
டொனால்ட் 300 விக்கெட்டுகளை வீழ்த்தினால், உலக அளவில் டெஸ்ட் போட்டிகளில்300 விக்கெட்டுகளை வீழ்த்திய 15-வது வீரர் என்ற பெருமையைப் பெறுவார்டொனால்ட். டொனால்டுக்குப் பின் இந்த சாதனையைப் பெறுபவர்கள் வரிசையில்இலங்கையின் முரளிதரன் (291), ஆஸ்திரேலிய வீரர் மெக்கிராத் (288) ஆகியோர்உள்ளனர்.
இங்கிலாந்துடன் நடந்த டெஸ்ட் போட்டிகளில்தான் டொனால்ட் அதிகவிக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மொத்தம் 86 விக்கெட்டுகளை அவர்வீழ்த்தியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக 57, பாகிஸ்தானுக்கு எதிராக 27 விக்கெட்டுகள், இலங்கைக்குஎதிராக 26, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 48, மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக 29,ஜிம்பாப்வேக்கு எதிராக 14, நியூசிலாந்து அணிக்கு எதிராக 10 விக்கெட்டுகளைவீழ்த்தியுள்ளார் டொனால்ட்.
ஐ.ஏ.என்.எஸ்.