மாடிஸ் விலையைக் குறைக்கிறது தேவூ
17 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் புதிய மாநிலத்தவராகி விட்டதால் உத்தரப்பிரதேசத்தில் பாஜக வின் மெஜாரிட்டி பலம்நூல் இழையில் தொங்குகிறது. ஆகையால் புதிய மாநிலம் என்ற குழந்தை பிறந்ததால், தாய்க்கும் சோதனை,சேய்க்கும் சிக்கல்.
அடுத்து ஜார்கண்ட். இங்கே யார் முதல்வர் என்பது தீர்மானமாகவில்லை. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சிபுசோரன் கோபித்துக் கொண்டு, பா.ஜ.க. கூட்டணியை விட்டு விலகி விட்டார். இப்படி அவருடைய கட்சி விலகியபிறகு கூட, பா.ஜ.க.வினால் மற்ற சில கட்சிகளுடன் சேர்ந்து மந்திரிசபையை அமைத்து விட முடியும்,
ஆனால், யார் முதல்வர் என்பதற்கு பா.ஜ.க.விலேயே பிரச்சனை இருக்கிறது. இதனால் பா.ஜ.க.வை உடைக்கமுடியுமா என்ற நப்பாசை சிபு சோரனுக்கு இருக்கிறது.
அவருக்கு ஆதரவு தெரிவிக்க காங்கிரஸ் முடிவு எடுத்தால், பா.ஜ.க. வுக்கு பிரச்சனைகள் எழலாம். கட்சித்தாவலுக்கு நல்ல களம் அமையவும் வாய்ப்புகள் உண்டு. பிஹாரில் வளம் மிக்க பகுதியாகத் திகழ்ந்தது - இப்போதுபிரிந்திருக்கிறது. அதனால் பிஹார் இனி அதிக மத்திய நிதி உதவியைக் கேட்கும்.
இந்தப் புதிய மாநிலங்கள் பிறந்ததால், மஹாராஷ்டிரம், ஆந்திரம் போன்ற வேறு பல மாநிலங்களிலும் இம்மாதிரிகோரிக்கைகள் பலமாக எழும். சரி, இவ்வளவு பிரச்சனைகளுக்கிடையே இந்த மாநிலங்கள்தோற்றுவிக்கப்பட்டிருப்பதால் கண்ட பலன் என்ன? மூன்று புதிய கவர்னர்கள் , மூன்று புதிய முதல்வர்கள், மூன்றுபுதிய தலைமைச் செயலாளர்கள், பல புதிய மந்திரிகள் ... என்று பல தலைகள் உருவாகி இருப்பதுதான் கண்டபலன்.
தேவையே இல்லாத ஒரு காரியம் செய்யப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. ஜனநாயக ஆட்சியென்பது -மக்களினால், மக்களுக்காக உருவாக்கப்படுகிற மக்களுடைய ஆட்சி.
அந்த ஆட்சியில், அரசியல்வாதிகளினால், அரசியல்வாதிகளுக்காகச் செய்யப்படுகிற அரசியல்வாதிகளுடையநலன் என்பது - அந்த ஜனநாயகத்தின் பலன். இந்த ஜனநாயக தத்துவத்திற்கு ஓர் உதாரணம் - புதிய மாநிலங்களின்தோற்றம்.