பிரதமரை இன்று சந்திக்கிறார் கர்நாடக முதல்வர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பது குறித்து கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா டெல்லியில் பிரதமர்வாஜ்பாயுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.

வீரப்பனைப் பிடிக்கும் விஷயத்தில் இரு மாநில அதிரடிப்படையினரும் இணைந்து செயல்படுவது என முடிவுசெய்துள்ளனர். பெங்களூரில் கமாண்டோ படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரு மாநிலங்களையும் சேர்ந்த மொத்தம் 1,320 அதிரடிப்படை வீரர்கள் காட்டில் முகாமிட்டுள்ளனர். இவர்களுக்குஉதவி செய்வதற்காக ராணுவ கமாண்டோ வீரர்களும் களத்தில் இறங்கவுள்ளனர்.

இதுதொடர்பாக, இரு மாநில அரசுகளின் உயர்அதிகாரிகள் டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்தி விட்டுத்திரும்பியுள்ளனர். வீரப்பனைப் பிடிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும், செய்ய மத்திய அரசு தயாராகஇருப்பதாக மத்திய அமைச்சர்கள் அத்வானி மற்றும் ஜார்ஜ் பெர்னான்டஸ் ஆகியோர், இந்த அதிகாரிகளிடம்உறுதியளித்துள்ளனர்.

கிருஷ்ணா டெல்லி பயணம்:

இந்த நிலையில், கர்நாடக முதல்வர் கிருஷ்ணா டெல்லி சென்றுள்ளார். பிரதமர் வாஜ்பாய், மத்திய அமைச்சர்கள்அத்வானி, ஜார்ஜ் பெர்னான்டஸ் ஆகியோரை திங்கள்கிழமை அவர் சந்தித்துப் பேசுகிறார். காலை 11.15 க்குஅத்வானியையும், மாலை 5.45 மணிக்கு பிரதமரையும், கிருஷ்ணா சந்தித்துப் பேசுவார்.

இதற்கிடையே, இந்த வார இறுதியில் கமாண்டோ வீரர்கள், வீரப்பனைப் பிடிக்க காட்டுக்குள் நுழைவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த பட்சம் 100 பேரும், அதிகபட்சம் 500 பேரும் செல்லலாம்.

கமாண்டோ வீரர்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தவுடன், ஒரு பிரிவினர் மைசூர் வழியாகவும், இன்னொருபிரிவினர் தமிழகத்தின் சேலம், தர்மபுரி, ஈரோடு வழியாகவும் காட்டுக்குள் செல்வார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+