பணம் பறிக்க முயன்ற 6 போலி நிருபர்கள் கைது
கிருஷ்ணகிரி:
கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதனை வெளியிடாமல் இருக்க 60,000 ரூபாய் பணம் தரவேண்டும் என மிரட்டிய 6 போலி பத்திரிக்கையாளர்களைப் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியில் கூட்டுறவு நிலவள வங்கி உள்ளது. இதன் தலைவராக பி.எம். கிருஷ்ணமூர்த்தி இருந்து வருகிறார்.6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை சந்தித்தது.
அப்போது அவரிடம், அவர்கள் தாங்கள் பத்திரிக்கை ஒன்றிலிருந்து வந்துள்ளோம். நீங்கள் நில வள வங்கியில்மோசடி செய்துள்ளதாக புகார் வந்துள்ளது. இது குறித்து செய்தி வெளியிடவுள்ளோம்.
அவ்வாறு செய்தி வெளியிட்டால் உங்களுக்கு மிகப் பெரும் கெட்ட பெயர் ஏற்படும். எனவே இதனைவெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால், 60 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கிருஷ்மூணர்த்தி, அவர்களை பிறகு கவனிப்பதாகக் கூறிவிட்டுச் சென்று விட்டார்.மறுநாள் அவர்கள் மீண்டும் கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்தனர். அப்போது அங்கு போலீசார் மறைந்திருந்தனர். அந்த கும்பலைச்சேர்ந்தவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டபோது அவர்களைப் போலீசார் கைது செய்தனர்.
இதில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சந்திரமோகன், பொன்ராஜ், பழனி, மேகராஜ், முனிராஜ், துரை ஆகியோர் அடங்குவர்.
போலீசார் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.