மருத்துவமனையில் கைதி தற்கொலை
சேலம்:
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி மாவட்டம், நாழிமங்கலத்தைச் சேர்ந்தவர் முனிராஜ் (41). இவர் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி அவரதுஅண்ணனைக் கொலை செய்து தண்டவாளத்தில் போட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த கொலை வழக்கில், டிசம்பர் 18ம் தேதி முனிராஜ் ஓசூர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். இவரை ஒசூர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரும்போது தப்பிச் செல்ல முயன்றார்.
அப்போது போலீசார் முனிராஜை மடக்கிப் பிடித்தனர். அப்போது முனிராஜூக்கு காலில் காயம் ஏற்பட்டது.இதனால், அவருக்கு சேலம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இங்கு கைதிகள் பாதுகாப்பு அறையில் தங்கி அவர் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் இவரை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்த போலீசார் வந்தனர்.
அப்போது, கழிவறைக்குச் செல்வதாகக் கூறிய முனிராஜ், அங்கு சென்று திரும்பி வரவில்லை.
சந்தேகமடைந்த போலீசார், கழிவறையை சோதனையிட்டனர். அப்போது அங்கு அவர் பேண்டேஜ் துணியில்தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்தும் போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.