ஸ்ரீநகரில் ஹூரியத் அமைப்பின் செயற்குழுக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
அகில இந்திய ஹூரியத் அமைப்பின் செயற்குழுக் கூட்டம் ஸ்ரீநகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில் ஹூரியத் அமைப்புத் தலைவர் அப்துல், சையது அலி ஷா, அப்துல் கானி லோன், முகமது யாசீன் மாலிக், அப்பாஸ் அன்சாரி, ஓமர் பரூக்,ஷேக் அப்துல் ஆசிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் வரும் ஜனவரி 15 ம் தேதி பாகிஸ்தான் சென்று ராணுவ ஆட்சியாளர் முஷாரப் மற்றும் பல்வேறு தீவிரவாத அமைப்புக்களுடன் பல்வேறுபிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
இந்த செயற்குழுக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீரில் தற்போதைய சூழ்நிலை மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications