ஜப்பானில் குற்றங்களுக்குப் பின்னால் டீன் ஏஜ் வாலிபர்கள்
டோக்கியோ:
தொழில்நகரமான ஜப்பானில் நடக்கும் கொலை, கொள்ளை, கடத்தல், குண்டுவெடிப்பு போன்ற முக்கியச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும்17 வயதுக்கும் குறைந்த டீன் ஏஜ் வாலிபர்கள்தான் என்று தெரிய வந்துள்ளது.
மேலும் டீன் ஏஜ் வாலிபர்களை இது போன்ற மாஸ்டர் மைன்ட் குற்றங்களில் ஈடுபட வைப்பதற்குக் காரணம் பத்திரிக்கைகள், ரேடியோ,தொலைக்காட்சி போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள்தானாம்.
தான் கேட்டதை தந்தை வாங்கிக் கொடுக்காத காரணத்தால் கோபமடைந்து வெளியே வந்து டோக்கியோ நகர வீதிகளில் சில நாட்களில் சுற்றித்திரிந்து விட்டு அங்கிருந்த வீடியோ கடை ஒன்றில் குண்டு வீசித் தகர்த்தார் ஒரு டீன் ஏஜ் வாலிபர். அதற்குப் பின் தனது வீட்டுக்குப் பக்கத்து வீட்டு முதியவர்ஒருவரை அடித்துக் கொன்று தனது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டார்.
இன்னொருவர் பள்ளி மாணவர் தனது நண்பர்களுடன் கூடைப்பந்து ஆடிய போது அவருக்கும், சக மாணவர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. இதனால்கோபமடைந்த அவர் தன் வீட்டுக்கு வந்ததும் தன் தாயை அடித்தே கொன்றார். ஏனெனில் தன் தாய் தன் கைச்செலவுக்குப் பணம் தர மறுத்ததால் தன்தாயைக் கொன்றதாக ஒப்புக் கொண்டார்.
சமீபத்தில் 16 வயதே ஆன காதல் ஜோடி டாக்ஸி டிரைவரை அடித்தது தொடர்பாகப் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் டாக்சியில் வந்துகொண்டிருந்து போது, டாக்சி டிரைவரின் பாக்கெட்டிலிருந்து பணத்தைத் திருட முயன்றிருக்கின்றனர். இவர் இதைப் பார்த்ததும் அவர்களை இறக்கி விட்டு விட்டுஅவர் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
ஜப்பானில் 2000 மாவது ஆண்டில் மட்டும் நடந்த குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்ககுநாள் அதிகரித்து வருகிறது. சட்டம் - ஒழுங்கு நிலை சரியாக இருந்தபோதிலும் டீன் ஏஜ் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சகஜமாகி வருகிறது.
1999 ம் ஆண்டு டீன் ஏஜ் வாலிபர்களால் செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை 1,042. 2000 மாவது ஆண்டு இவர்களால் செய்யப்பட்ட குற்றங்களின்எண்ணிக்கை 1,063. தற்போது இந்த டீன் ஏஜ் கு ற்றவாளிகள் செய்து வரும் குற்றங்கள் ஜப்பான் நாட்டின் மிகப் பெரிய சமுதாயப் பிரச்சனையாகக்கருதப்படுகிறது. இதைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் போலீஸார் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications