கருணாநிதியுடன் வாழப்பாடி ராமமூர்த்தி ஆலோசனை
சென்னை:
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி முதல்வர் கருணாநிதியைசந்தித்து 1 மணி நேரம் பேசினார்.
பாட்ாடளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் தமிழக முதல்வரை சென்ற வாரம்சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். வாழப்பாடி ராமமூர்த்தியை தேசிய ஜனநாயககூட்டணியிலிருந்து விலக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் ராமதாஸ், முதல்வரைசந்தித்து பேசியது அரசியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இந் நிலையில் த.ரா.கா. தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை முதல்வர்கருணாநிதியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 1 மணி நேரம் நீடித்தது. இந்தசந்திப்பு முதல்வர் இல்லத்தில் நடைபெற்றது.
த.ரா.கா.வை தே.ஜ. கூட்டணியில் இருந்து விலக்க வேண்டும் என ராமதாஸ்வலியுறுத்தி வருவதற்கான காரணம் குறித்து வாழப்பாடிராமமூர்த்தி முதல்வர்கருனாநிதியிடம் விளக்கியதாக கூறப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களை பெற வேண்டும் எனவே ராமாதாஸ் பிரச்னைகிளப்பி வருகிறார். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். இதற்காககூட்டணி கட்சிகளை கூட்டவேண்டும், அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியமற்ற விவரங்கள் குறித்தும் வாழப்பாடி ராமமூர்த்தி முதல்வரிடம் கூறினார் எனகூறப்படுகிறது.
அ.தி.மு.க.வுடன் ராமதாஸ் பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறப்படுவது குறித்து சிலசந்தேகங்களை வாழப்பாடியிடம் முதல்வர் கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.
வாழப்பாடி ராமமூர்த்தி தனது மகனது திருமணத்திற்கு வருமாறு முதல்வருக்குஅழைப்பு விடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications