மும்பைக்கும் ஆபத்து?
மும்பை:
இந்தியாவின் மிக முக்கியமான வணிக ஸ்தலமான மும்பையில் நிலநடுக்கம் ஏற்படுமா என்ற கேள்விஎழுந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 26-ம் தேதி நில நடுக்கம் ஏற்பட்டது. மாநிலத்தையே பெரும் சோகத்துக்குள் ஆழ்த்தியபூகம்பத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து மும்பையிலும் 5.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 1993 ம்ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் லத்தூர், ஒஸ்மானபாத் பகுதிகளில் நிலநடுக்கம்ஏற்பட்டது.
இந்த நிலையில், தற்போது மும்பை நகரில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாககணிக்கப்பட்டுள்ளது. மும்பை தவிர, மகாராஷ்டிர மாநிலத்தின் லத்தூர், பீட், நாசிக், சாங்க்லி, பிரபானி, சாத்ரா,பூனா, நாக்பூர், ரத்னகிரி ஆகிய மாவட்டங்களிலும் நிலநடுக்க அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மும்பையில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அது மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும்கணக்கிட்டுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications