இந்தியா வருகிறார் சந்திரிகா
டெல்லி:
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலுள்ள இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் இலங்கை அதிபர்சந்திரிகா குமாரதுங்கா மூன்று நாட்கள் சுற்றுப் பயணமாக பிப்ரவரி 22 ம் தேதி இந்தியா வருகிறார்.
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா 1998 ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா வந்திருந்தார். அப்போது பிரதமர்வாஜ்பாய் மற்றும் ஜனாதிபதி கே.ஆர். நாராயணனைச் சந்தித்துப் பேசினார். அப்போது வர்த்தகத்தில் இரண்டுநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்தான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்தியாவில் சந்திரிகா குமாரதுங்காவின் சுற்றுப்பயணம் குறித்தான தகவல்கள் பாதுகாப்பு காரணமாக மிகவும்ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. 1999 ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைகள் வைத்த குறியில்தப்பித்த சந்திரிகா பாதுகாப்பில் மிகவும் கவனமாக இருக்கிறார்.
இலங்கை இனப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் நார்வே தூதர் எரிக் சோல்ஹெம் இலங்கைசென்று அரசையும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனையும் சந்தித்துப் பேசினார். இதையடுத்து தற்போதுஇந்தியா வரத் திட்டமிட்டுள்ளார் சந்திரிகா.
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா உள்பட பல நாடுகள் வலியுறுத்திவருகின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications