மிட்சுபிஷி நிறுவனத்தில் ஆட்குறைப்பு
டோக்கியோ:
உலகின் 10 வது பெரிய கார் உற்பத்தியாளர்களான மிட்சுபிஷி மோட்டார் நிறுவனம் நஷ்டத்தை குறைப்பதற்கான9,600 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய உத்தேசித்துள்ளதாக தெரிகிறது.
ஜப்பானிய பத்திரிக்கை ஒன்று வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ள தகவலின் படி, மிட்சுபிஷி நிறுவனம் தனதுசெலவை 30 சதவீத அளவிற்கு குறைக்க திட்டமிட்டுள்ளது.
1.21 மில்லியன டாலர் அளவிற்கு இந்தாண்டு நஷ்டம் ஏற்படும் என கணக்கிட்டுள்ள அந்நிறுவனம் உலகம்முழுவதிலும் இருந்து பழுதடைந்த கார்களை திரும்ப அழைத்து கொண்டதுடன் அவற்றை சரி செய்வதற்காகநடப்பாண்டில் மட்டும் 17 மில்லியன் யென்களை செலவழித்துள்ளது.
தனது புதிய திட்டம் பற்றி பிப்ரவரி 26ல் அறிவிக்க உள்ள மிட்சுபிஷி நிறுவனம் நகோயா பகுதியில் உள்ளதொழிற்சாலையை மூட முடிவு செய்துள்ளது.
ஜப்பானிய பத்திரிகையின் இச்செய்திகள் அவற்றின் ஊகங்களே. இவை பற்றி கருத்துக்கூற இயலாது எனதெரிவித்த மிட்சுபிஷி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், நிறுவனத்தின் புதிய திட்டம் பற்றி அதிகாபூர்வமாகஅறிவித்த பின்பே கருத்து தெரிவிக்க இயலும் என்றார்.
பங்கு மார்க்கெட்டை பொறுத்தவரையில் மிட்சுபிஷி நிறுவனத்தின் பங்குகள் புதனன்று ஏறுமுகத்தில் இருந்தன.