மீனவர் பலி .. திருநாவுக்கரசு கண்டனம்
சென்னை:
ஜெகதாப்பட்டினம் அருகே நடுக்கடலில் இலங்கை கடற்படை வீரர்கள் சுட்டு தமிழகமீனவர் பலியானதற்கு எம்.ஜி.ஆர். அதிமுக, ஆழ்ந்த இரங்கலும், இலங்கை அரசுக்குக்கண்டனமும் தெரிவித்துள்ளது.
ஜெகதாப்பட்டினம் அருகே நடுக்கடலில் கோபி என்ற மீனவர் இலங்கை வீரர்களால்சுடப்பட்டு இறந்தார். 2 மீனவர்கள் வீரர்களிடமிருந்து தப்பி வந்தனர்.
இதுகுறித்து எம்.ஜி.ஆர்.அதிமுக பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியுள்ளதாவது:
எம்.பி. என்ற முறையிலும், எம்.ஜி.ஆர்.அதிமுக பொதுச் செயலாளர் என்றமுறையிலும் இந்த கொடூர சம்பவத்தைக் கண்டிக்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள்தொடர்ந்து நடைபெறாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
துப்பாக்கிச் சூட்டில் இறந்த கோபி குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவரின் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களின்குடும்பத்திற்கும் நிதியுதவி செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் அவர்.